பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் பரத். அதன்பிறகு விஷால் அறிமுகமான செல்லமே படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தார். பின்னர் காதல் படத்தின் ஹிட்டுக்கு பிறகும் ஆர்யாவுடன் இணைந்து பட்டியல் படத்தில் நடித்த பரத் ஆரம்ப காலத்தில் வெற்றியும், தோல்வியுமாக மாறி மாறி சந்தித்து வந்தார்.
ஆனால், கண்டேன் காதலை படத்திற்கு பிறகு தொடர் தோல்விகளாக அமைந்தன. அதனால், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல், ஜாக்பாட் இந்தி படத்திலும் நடிக்க சென்ற பரத், இப்போது ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். கடைசியாக அவர் அதிகமாக எதிர்பார்த்த ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம் அவரை ரொம்பவே ஏமாற்றி விட்டது.
அதனால், இப்போது அவரை நம்பி படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. ஆக, டபுள் ஹீரோ கதைகளில் நடித்தாவது தன்னை தக்க வைத்துக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் பரத், தற்போது ஒரு படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில், அடுத்தடுத்து யாராவது டபுள் ஹீரோ கதையில் படம் இயக்குவது கேள்விப்பட்டால் அவர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்கவும் தொடங்கியிருக்கிறார் பரத்.