Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிகாலை 5 மணிக்கே முதல் ஷாட் வைக்கும் மணிரத்னம்!

25 டிச, 2014 - 10:15 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் மணிரத்னத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு என்று வந்து விட்டால் ரொம்ப சீரியசாகி விடுவார். அவரது படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாத சலசலப்புகள் இருக்காது. அனைவருமே அவரவர் வேலையை சின்சியராக பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதே மாதிரி, ஒரு நாளைக்கு இத்தனை காட்சிகளை எடுத்து விட வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார்.


ஒரு லொகேசனில் எடுக்கும் காட்சிகள் எப்போது நூறு சதவிகிதம் சரியாக வருகிறதோ அப்போதுவரை படமாக்கிக்கொண்டேயிருப்பார். அந்த வகையில் பட விசயத்தில் அவரிடம் காம்ப்ரமைஸ் என்பதே இருக்காது. தான் எதிர்பார்த்த ரிசல்ட் வருவதற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிட்டுக்கொண்டேயிருப்பார்.


இந்நிலையில், தற்போது துல்கர்சல்மான்-நித்யாமேனனை வைத்து ஓகே கண்மணி படத்தை இயக்கி வருபவர், இதற்கு முன்பு இயக்கிய படங்களை விட இந்த படத்தில் அதிக சின்சியாரிட்டியுடன் ஒர்க் பண்ணுகிறாராம். முக்கியமாக, அதிகாலையிலேயே ஒவ்வொரு நாளும் அவர் படப்பிடிப்பை தொடங்கி விடுகிறாராம். அதாவது சன்ரைஸ்க்கு முன்பே அவர் ஸ்பாட்டில் போய் நிற்கிறாராம். பல நாட்களில் முதல் ஷாட்டை காலை 5 மணிக்கே வைத்து விடுகிறாராம். இதனால் அந்த படக்குழுவினர் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து மேக்கப், காஸ்டியூம்களை போட்டுக்கொண்டு ஸ்பாட்டை நோக்கி ஓடோடிச்செல்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)