Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர்களை கவர்ந்த கவிஞர் ஜெயங்கொண்டானின் சமையல்!

19 டிச, 2014 - 10:27 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்கு சுந்தரம், தங்க பாம்பு உள்பட பல படங்களில் பாடல் எழுதியவர் ஜெயங்கொண்டான். தற்போது, வந்தா மலை, நாடக மேடை, வலை உள்பட சில படங்களில் பாடல்கள் எழுதி வளர்ந்து கொண்டிருக்கிறார்.


இவர், சென்னை கே.கே நகரில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் ஒரு ஹோட்டலும் நடத்தி வருகிறார். சிறு வயதில் இருநதே கவிதை எழுதி வந்தவர், சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்திருக்கிறார். ஆனால், தான் எதிர்பார்த்தபடி சினிமாவில் சரியான வாய்ப்புகள கிடைக்காததால், ஒரு ஹோட்டலை நடத்தியபடி தொடர்ந்து சினிமாவில் பாட்டெழுத முயற்சி எடுத்து வந்திருக்கிறார்.


இப்போது பல படங்களில் அவர் பாட்டெழுதி வரும் நிலையில், அவரது ஹோட்டலும் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. சினிமாவில் உள்ள பல நடிகர்கள் இவரது ஹோட்டலுக்கு சென்று அவர் சமைத்துக்கொடுக்கும் ருசியான உணவுகளை சாப்பிட்டு விட்டு மனதார அவரை பாராட்டியும் வருகிறார்கள்.


அந்த வகையில், நடிகர் பார்த்திபனுக்கு இவர் சமைக்கும் செட்டி நாடு சிக்கன், எக் குருமா என்றால் ரொம்ப பிடிக்குமாம். தனது அலுவலகத்துக்கு அருகிலேயே இவரது ஹோட்டல் இருப்பதால் அவ்வப்போது சென்று சாப்பிடுகிறாராம் பார்த்திபன். அதேபோல், கஞ்சா கருப்புவுக்கு காடை கறியும். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு முட்டை பரோட்டாவும். காமெடி சூரிக்கு மதுரை பரோட்டாவும், அங்காடித்தெரு மகேசுக்கு முட்டை வாப்பாவும் ரொம்ப பிடிக்குமாம். இப்படி தனது கைமணத்தில் சினிமாக்காரர்களை வெகுவாக கவர்ந்துள்ள பாடலாசிரியர் ஜெயங்கொண்டான், தனது கவிதை மணத்தாலும் சினிமா உலகை விரைவில் கவருவேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)