மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! |
சினிமாவில் வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்கு சுந்தரம், தங்க பாம்பு உள்பட பல படங்களில் பாடல் எழுதியவர் ஜெயங்கொண்டான். தற்போது, வந்தா மலை, நாடக மேடை, வலை உள்பட சில படங்களில் பாடல்கள் எழுதி வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இவர், சென்னை கே.கே நகரில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் ஒரு ஹோட்டலும் நடத்தி வருகிறார். சிறு வயதில் இருநதே கவிதை எழுதி வந்தவர், சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்திருக்கிறார். ஆனால், தான் எதிர்பார்த்தபடி சினிமாவில் சரியான வாய்ப்புகள கிடைக்காததால், ஒரு ஹோட்டலை நடத்தியபடி தொடர்ந்து சினிமாவில் பாட்டெழுத முயற்சி எடுத்து வந்திருக்கிறார்.
இப்போது பல படங்களில் அவர் பாட்டெழுதி வரும் நிலையில், அவரது ஹோட்டலும் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. சினிமாவில் உள்ள பல நடிகர்கள் இவரது ஹோட்டலுக்கு சென்று அவர் சமைத்துக்கொடுக்கும் ருசியான உணவுகளை சாப்பிட்டு விட்டு மனதார அவரை பாராட்டியும் வருகிறார்கள்.