பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பிரபல பின்னணி பாடகர் காந்தக்குரலோன் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாசும் இன்றைய முன்னணி இளம் பாடர்களில் ஒருவர். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் உண்டு. இதனை பலமுறை அவர் நேர்காணல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் என்ற மலையாளப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு நடிக்கவில்லை.
இப்போது தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் மாரி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். பாலாஜி மோகன் இயக்கும் இந்தப் படத்தை மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். தனுசும், விஜய்யும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பு விஜய்க்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க விஜய் யேசுதாஸ் முடிவு செய்திருக்கிறார்.