பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என்பது இநதியா முழுவதிலும் உள்ள ஹீரோக்களுக்கு கனவாக உள்ளது. அந்த வகையில் பல ஹீரோக்களின் ஐஸ்வர்யாராய் கனவு இன்னும் கனவாகவேதான் உள்ளது. ரஜினிக்குகூட எந்திரன் படத்தில்தான் அது நனவானது. இப்போது அவர் குழந்தை பெற்று மறுபடியும் நடிக்க வந்திருப்பதால் சில ஹீரோக்கள் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என்ற தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்படி இளவட்ட ஹீரோக்கள் சொல்லிவரும் நிலையில், நடிகர் சீனிவாசனும் அவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு எனது கனவு ஹீரோயினி ஐஸ்வர்யாராய்தான். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது பெரிய கனவாக உள்ளது என்று கூறுகிறார்.
நேற்று காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நோ என்ற படத்தின் பூஜைக்கு வந்திருந்தபோது மீடியாக்கள் கேட்டபோதுதான் இப்படி சொன்னார் சீனிவாசன். அவரிடத்தில், ஐஸ்வர்யாராயுடன் உங்களை இணைக்க எந்த டைரக்டர்களும் முன்வராதபட்சத்தில் அவரை வைத்து நீங்களே சொந்த படம் எடுப்பீர்களா? என்று கேட்டதற்கு, ஏற்கனவே படம் தயாரித்து சினிமாவில் கோடிக்கணக்கில் நான் விட்டிருக்கிறேன்.