பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சமீபகாலமாக காமெடியன்களும் ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானத்தைத் தொடர்ந்து ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் கருணாகரன் ஹீரோவாக நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு காமெடியனான சதீசும் தற்போது தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் ஏற்கனவே நகுல, தினேஷ் என்ற இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால் மூன்று விதமான ட்ராக் கொண்ட கதை என்பதால் நானும் ஒரு ட்ராக்கில் நடிக்கிறேன். கதைப்படி எனக்கு கால் டாகசி டிரைவர் வேடம். அதோடு எனக்கு ஷாலு என்ற நடிகையும் ஜோடியாக நடிககிறார்.
முதன்முதலாக எனக்கு ஹீரோ வேடம் மட்டுமின்றி ஒரு ஜோடியும் தரப்பட்டதால் இந்த படத்தில் அதிக ஈடுபாடு காண்பித்து நடித்தேன் எனறு கூறும் சதீஷ், இப்படத்தில் கால் டாக்சி டிரைவராக நடித்தபோது, ஒரு உயரமான பில்டிங்கில் கேமராக்களை வைத்து இவர் ஒரு தெருவில் டாக்சி ஓட்டுவது போல் படமாக்கினார்களாம். அப்போது, ஒரு பெரியவர் இவரை கால் டாக்சி டிரைவர் என்ற நினைத்து, தி.நகருக்கு செல்ல வேண்டும் என்று காரில் ஏறினாராம்.
அப்போது, நான் கால் டாக்சி டிரைவர் இல்லை. சினிமாவுக்காக கால் டாக்சி டிரைவராக நடிக்கிறேன். மேலே பாருங்கள் கேமரா வைத்து என்னை படமாக்கிக்கொண்டிருக்கிறர்கள் என்று அவரிடம் சொலலி அனுப்பி வைத்தாராம். அந்த அளவுக்கு அந்த டாக்சி டிரைவர் கதாபாத்திரம் சதீசுக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறதாம்.