பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கடந்த வாரம் வெளிவந்த படங்களில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படமாக 'திருடன் போலீஸ்' படம் அமைந்துள்ளது. இப்படத்தை யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத கார்த்திக் ராஜு என்பவர் இயக்கியிருக்கிறார். ஒரு கான்ஸ்டபிளின் யதார்த்த வாழ்க்கையை சித்தரித்த இந்தப் படம் நகைச்சுவையுடனும், சுவாரசியமான சம்பவங்களுடனும் அமைந்துள்ளதால் அனைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு தனது நண்பர்களுக்குப் பாராட்டைச் சொல்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு...“நான் இதற்கு முன் எந்த இயக்குனருடனும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. சில முக்கிய படங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தப் படத்தின் கதையை என் நண்பன் செல்வகுமாரிடம் சொன்னதும் அவனே தயாரிக்க முன் வந்தான். இந்தப் படத்தின் கதை உருவாவதற்கும் வேறொரு நண்பன்தான் காரணமாக இருந்தான். என்னுடைய நண்பன் ஒருவன் காவல் துறையில் இருக்கிறான். அவன்தான் அடிக்கடி அவன் அனுபவத்தில் நடந்த சில விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பான். அவை என்னை பாதித்ததால்தான் 'திருடன் போலீஸ்' கதையை அமைத்தேன். இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு அவர்களிருவரும்தான் காரணம். அடுத்து மீண்டும் நண்பனின் தயாரிப்பில் 'உள் குத்து' என்ற படத்தை இயக்க உள்ளேன். இந்தப் படத்திலும் தினேஷ்தான் நாயகன், ” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் கார்த்திக் ராஜு.