அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
இயக்குனர் ராம்கோபால் வர்மாவும், சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என கடந்த சில மாதங்களாகவே நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் எதையாவது ஒரு கருத்தைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் கடந்த சில வாரங்களாகத்தான் அதிகமாக செய்திகளில் அடிபடாமல் இருக்கிறார். ஆனால், அதற்கு மொத்தமாக தற்போது ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் சம்பூர்ணேஷ் பாபு என்ற ஒரு நடிகர் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். தெலுங்குத் திரைப்படங்களைக் கிண்டலடித்து அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹிருதய கலேயம்' என்ற படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதோடு, சமூக வலைத்தளங்களிலும் அவர் நடித்த படங்களின் காட்சிகள், அவரைப் பற்றிய கமெண்ட்டுகள் என பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'ஆகாடு' படத்தின் போது அவரைப் பற்றி மோசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்ட ராம்கோபால் வர்மா, தற்போது மகேஷ்பாபுவைக் கிண்டலடிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம். 'போக்கிரி ரிட்டர்ன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் சம்பூர்ணேஷ் பாபுதான் நாயகனாக நடிக்கப் போகிறாராம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொதித்துப் போயிருக்கிறார்களாம்.