Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன் முறையாக நாட்டிய நாடகத்தில் நடிக்கிறார் சுஹாசினி!

10 நவ, 2014 - 11:32 IST
எழுத்தின் அளவு:

பிரபல நாட்டிய கலைஞர் கிருத்திகாவின் நமார்கம் டான்ஸ் கம்பெனியும், நடிகை சுஹாசினியின் டேலண்ட் சவுத் நிறுவனமும் இணைந்து அந்தரம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இது வருகிற 28ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி ஆகியவற்றை தேவதைகளின் கதைகள் வழியாக மக்களுக்கு எளிதில் புரியும்படியாக இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதில் கிருத்திகா சுப்பிரமணியம் பரத நாட்டியத்தையும், கோபிகா வர்மா மோகினி ஆட்டத்தையும், யாமினி ரெட்டி குச்சிப்புடி நடனத்தையும் ஆடுகிறார்கள். நடிகை சுஹாசினி நாடகம் மற்றும் நடன பாணியில் கர்நாட மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் கோல் குப்பஸ் பகுதியை சேர்ந்த இப்போதும் கொண்டாடப்படுகிற ரம்பா என்ற நடனப்பெண்ணின் கதையை நாட்டிய நாடகமாக நடிக்கிறார்.


இதற்கான பாடல்களை அருண், ராஜ்குமார், மற்றும் சுஹாசினி எழுதி உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், ஜெயேந்திரன் இயக்கி உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)