நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
பிரபல நாட்டிய கலைஞர் கிருத்திகாவின் நமார்கம் டான்ஸ் கம்பெனியும், நடிகை சுஹாசினியின் டேலண்ட் சவுத் நிறுவனமும் இணைந்து அந்தரம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இது வருகிற 28ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி ஆகியவற்றை தேவதைகளின் கதைகள் வழியாக மக்களுக்கு எளிதில் புரியும்படியாக இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் கிருத்திகா சுப்பிரமணியம் பரத நாட்டியத்தையும், கோபிகா வர்மா மோகினி ஆட்டத்தையும், யாமினி ரெட்டி குச்சிப்புடி நடனத்தையும் ஆடுகிறார்கள். நடிகை சுஹாசினி நாடகம் மற்றும் நடன பாணியில் கர்நாட மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் கோல் குப்பஸ் பகுதியை சேர்ந்த இப்போதும் கொண்டாடப்படுகிற ரம்பா என்ற நடனப்பெண்ணின் கதையை நாட்டிய நாடகமாக நடிக்கிறார்.
இதற்கான பாடல்களை அருண், ராஜ்குமார், மற்றும் சுஹாசினி எழுதி உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், ஜெயேந்திரன் இயக்கி உள்ளார்.