Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெயர் கிடைக்க போராடும் அருந்ததி!

28 அக், 2014 - 04:29 IST
எழுத்தின் அளவு:

''வெளுத்துக்கட்டு'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருந்ததி. முதல்படத்தில் குடும்ப பாங்காக நடித்தவர், ''நேற்று இன்று'' படத்தில் படுகிளாமராக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து சுண்டாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த எந்த படமும் அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. அதனால் இனி கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார். அதன்படி இப்போது சிபிராஜ் உடன் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்தில் நடிக்க பல நடிகைகள் ஆடிஷனுக்கு வரவழைக்கப்பட்டு இறுதியில் அருந்ததி தேர்வு செய்யப்பட்டார்.


இதுகுறித்து அருந்ததி கூறுகையில், நாய்கள் ஜாக்கிரதை படம் அருமையான சஸ்பென்ஸ் கதை. இனி நான் நடிக்கும் படங்கள் எல்லாம் எனக்கு பெயர் கிடைக்கும் படி பார்த்து கொள்வேன், கண்டிப்பாக இனி நான் தேர்வு செய்யும் படங்கள், கேரக்டர்கள் எல்லாம் அப்படி தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)