விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
விநாயகரின் தலையை துண்டித்த சிவன் தீவிரவாதியை விட கொடுமையானவன் என்று கருத்து வெளியிட்டு பெரும் எதிர்ப்புகளை சந்தித்தார் டைரக்டர் ராம்கோபால்வர்மா. அதையடுத்து இப்போது மகாத்மா காந்தியைப் பற்றியும் கிண்டல் செய்து மீண்டுமொரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதனால் நாடு முழுவதுமுள்ள சமூக ஆர்வலர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் இயக்கி வரும் சாவித்ரி என்ற படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதையடுத்து மாதர் சங்கங்கள் அவருக்கு எதிராக கொடி பிடித்துள்ளன. காரணம் அப்படத்தில் ஒரு பத்து வயது சிறுவன், ஆசிரியையின் இடுப்பழகை வக்கிரத்தன்மையுடன் பார்ப்பது போன்றும், ஆசிரியை தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது கால்களை ஜன்னல் வழியே அவன் ரசிப்பது போலவும் காட்சிகள் அமைத்திருக்கும் ராம்கோபால் வர்மா தற்போது அந்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
ஐதராபாத்திலுள்ள பிரதான சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை பார்த்து மாதர் சங்கங்கள் வெகுண்டெழுந்து நிற்கின்றன. மாணவர்களை தப்பான வழிக்கு ராம்கோபால்வர்மா திருப்ப முயற்சிக்கிறார். அதோடு புனிதமான ஆசிரியர் தொழிலை அசிங்கப்படுத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ள பெண்கள் அமைப்புகள், அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அதோடு அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், குழந்தைகள் நல மையம் ராம்கோபால் வர்மா மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுபற்றி ராம்கோபால்வர்மா விடுத்துள்ள செய்தியில், என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவங்களை படமாக்கியிருக்கிறேன். அதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது என்று தனக்கு எதிராக கொடி பிடித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.