பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சமீபத்தில் டில்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற ப்ளஸ்-2 படிக்கும் மாணவன், வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த இடத்தின் தடுப்புச்சுவரை தாண்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டான். அதையடுத்து, அந்த வெள்ளைப்புலியால் கொல்லப்பட்டான். முன்னதாக, அந்த புலியிடமிருந்து அந்த இளைஞனை காப்பாற்ற பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அந்த வெள்ளைப்புலியை கொன்று விடுமாறு நாடெங்கிலும் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து கூறி வருகின்றனர். அதேசமயம், புலியை கொல்லக்கூடாது. என்றும் ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில, விலங்குகள் மீதும் அதிக பாசம் கொண்டவரான நடிகை த்ரிஷாவும், அந்த வெள்ளைப்புலியை கொல்லக்கூடாது என்று ஜனாதிபதிக்கு தனது டுவிட்டர் மூலம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். விலங்குகள் நல வாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, புலியை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறும் தன்னுடன் பேஸ்புக்கில் தொடர்பில் இருப்பவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.