பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சுசீந்திரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'பாண்டிய நாடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் விஷால் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம் சுசீந்திரன். விஜய், அஜித்தையெல்லாம் இயக்க மாட்டீர்களா எனக் கேட்டால் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களும் சரியென்றுதான் சொன்னார்கள் என்கிறார் சுசீந்திரன்.
அவர் மேலும் கூறுகையில், “அப்படி அவங்களை மாதிரி பெரிய ஸ்டாரோட படம் பண்ணும் போது சாதாரணமான ஸ்கிரிப்டா இல்லாம ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். நான் இதுவரைக்கும் கதையைத் தயார் செய்துட்டுதான் அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்வேன். ஹீரோவுக்குன்னு கதை தயார் பண்ணணும்னா அதுக்குன்னு தனியா ஒர்க் பண்ணணும். முதல் முறையாக ஒரு ஹீரோவுக்காக கதை பண்ணப் போறேன். அப்படி நான் பண்ற படம் விஷாலுக்கு. 'பாண்டிய நாடு' படத்துக்கு முன்னாடி நான் ஃபெயிலியர் கொடுத்திருந்தாலும் என்னை நம்பி அட்வான்ஸ் கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்காக ரொம்ப மெனக்கெட்டு ஒரு கதை பண்ணப் போகிறேன், ” என்கிறார் சுசீந்திரன்.