Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலுக்காக மீண்டும் படம் இயக்கும் சுசீந்திரன்!

29 ஆக, 2014 - 03:26 IST
எழுத்தின் அளவு:

சுசீந்திரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'பாண்டிய நாடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் விஷால் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம் சுசீந்திரன். விஜய், அஜித்தையெல்லாம் இயக்க மாட்டீர்களா எனக் கேட்டால் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களும் சரியென்றுதான் சொன்னார்கள் என்கிறார் சுசீந்திரன்.


அவர் மேலும் கூறுகையில், “அப்படி அவங்களை மாதிரி பெரிய ஸ்டாரோட படம் பண்ணும் போது சாதாரணமான ஸ்கிரிப்டா இல்லாம ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். நான் இதுவரைக்கும் கதையைத் தயார் செய்துட்டுதான் அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்வேன். ஹீரோவுக்குன்னு கதை தயார் பண்ணணும்னா அதுக்குன்னு தனியா ஒர்க் பண்ணணும். முதல் முறையாக ஒரு ஹீரோவுக்காக கதை பண்ணப் போறேன். அப்படி நான் பண்ற படம் விஷாலுக்கு. 'பாண்டிய நாடு' படத்துக்கு முன்னாடி நான் ஃபெயிலியர் கொடுத்திருந்தாலும் என்னை நம்பி அட்வான்ஸ் கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்காக ரொம்ப மெனக்கெட்டு ஒரு கதை பண்ணப் போகிறேன், ” என்கிறார் சுசீந்திரன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)