விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, பிரபாகரனின் மகன் பாலசந்திரனை மையப்படுத்தி உருவாகியுள்ள புலிப்பார்வை படத்திற்கும் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துக்கொண்டேயிருக்கிறது. அப்படத்தின் ஆடியோ விழாவின்போதுகூட எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் அடித்து காயப்படுத்தினர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகே புதிய பாரதம் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில், புலிப்பார்வை படத்தில் பாலசந்திரன் தீவிரவாதி போன்று சித்தரித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது.
மேலும் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவின் ஆதரவாளர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதனால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும். மறுத்தால் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து புதிய பாரதம், அப்படத்துககு எதிராக தொடர்ந்து போராடும். விஜய், முருகதாஸ் இருவரும் கத்தி படத்திலிருந்து விலகாவிட்டால், விரைவில் அவர்கள் இருவரது வீடுகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.