சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ்ப்படத்தில்தான் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பின்னர் தெலுங்கிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிகமான படங்கள் கிடைத்ததால் அங்கே முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், ஆந்திராவிலேயே தனது தலைமை அலுவலகத்தை உருவாக்கி விட்டார் சமந்தா. அவரை பட விசயமாக யார் தொடர்பு கொண்டாலும் ஆந்திராவில் இருக்கும் அவரது மேனேஜரிடம்தான் பேச வேண்டுமாம். இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். நான் படித்தது சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி என்பதால் எனது தோழிகள் அனைவருமே சென்னையில்தான் உள்ளனர். அதனால் சென்னை வந்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். அதனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது. என்று கூறியுள்ள சமந்தா, சென்னையிலுள்ள எனது தோழிகளை நான் அதிகமாக மிஸ் பண்ணுவதாக நான் அடிக்கடி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.