சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ்ப்படத்தில்தான் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பின்னர் தெலுங்கிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிகமான படங்கள் கிடைத்ததால் அங்கே முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், ஆந்திராவிலேயே தனது தலைமை அலுவலகத்தை உருவாக்கி விட்டார் சமந்தா. அவரை பட விசயமாக யார் தொடர்பு கொண்டாலும் ஆந்திராவில் இருக்கும் அவரது மேனேஜரிடம்தான் பேச வேண்டுமாம். இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். நான் படித்தது சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி என்பதால் எனது தோழிகள் அனைவருமே சென்னையில்தான் உள்ளனர். அதனால் சென்னை வந்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். அதனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது. என்று கூறியுள்ள சமந்தா, சென்னையிலுள்ள எனது தோழிகளை நான் அதிகமாக மிஸ் பண்ணுவதாக நான் அடிக்கடி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.