Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரஷாந்த்துடன் செமத்தியாக குத்தாட்டம் போட்ட இந்தி நடிகை!

31 ஜூலை, 2014 - 05:05 IST
எழுத்தின் அளவு:

நடிகர் பிரஷாந்த், இவர் சற்று இடைவெளிக்கு பிறகு, தற்போது சாஹசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். அருண் ராஜ் வர்மா என்ற புதியவர் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு அதிரடியான குத்து பாடலுக்கு, இந்தியில் இருந்து நர்கீஸ் பக்ரி என்ற நடிகையை அறிமுகம் செய்துள்ளனர். பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர் ரன்பீர் கபூருடன் ராக்ஸ்டார், ஜான் ஆபிரஹாம் உடன் மெட்ராஸ் கபே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

காரத்தில் காரத்தில் சில்லி இவ....


தூரத்தில் பார்த்தாலே நா ஸ்பைசி...


வாசத்தால் மல்லி இவ... பக்கத்தில் வந்தா....


எனும் அதிரடியான குத்துப்பாடலுக்கு பிரஷாந்த் உடன் சேர்த்து செம ஆட்டம் ஆடியிருக்கிறார் நர்கீஸ் பக்ரி. ஒரு பெண்ணுக்கு என்ன பிடிக்கும் என்பதை இந்தப்பாட்டில் சொல்லியிருக்கிறார்களாம். தமனின் இசையில், மதன் கார்கி இந்தப்பாடலை எழுதியுள்ளார். சமீபத்தில் இந்தப்பாடல் படமாக்கப்பட்டது. தமிழில் இதுவரை இப்படி ஒரு அதிரடி குத்து பாடல் வந்ததே இல்லையாம். அந்தளவுக்கு இந்தப்பாடல் வந்திருப்பதாகவும், அதில் பிரஷாந்த், நர்கீஸ் இருவரும் சேர்ந்து அப்படியொரு ஆட்டம் ஆடியிருப்பதாகவும் சாஹசம் படக்குழுவினர் கூறுகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)