தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' |
பூஜை படத்துக்காக காரைக்குடியில் முகாமிட்டிருந்தபோது, அங்குள்ள கேபிள் டி.விகளில் சில புதிய படங்கள் ஒளிபரபரப்பாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் விஷால் அதையடுத்து, சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசில பிடித்துக்கொடுத்து, தான் ஒரு பொறுப்புள்ள சினிமாக்காரர் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டார்.
ஆனால், அதையடுத்து அவர் நடிக்கும் இன்னொரு படமான ஆம்பளை படப்பிடிப்பும் தற்போது காரைக்குடி பகுதியிலேயே நடந்து வருகிறது. அங்கு முகாமிட்டு நடித்து வரும் விஷால், தினமும் அதிகாலையில் சைக்கிள் ஓட்டியபடி அந்த ஊரை ரவுண்டு அடிப்பாராம். அப்படி அவர் செல்லும்போது சிலர் கண்டும் காணாததும்போல் சென்றாலும், ஒரு ரசிகர் மடடும் தினமும் விஷாலை பின் தொடர்ந்ததோடு, அவரை தனது செல்போனில் விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தாராம்.
இதை சில நாட்கள் கண்டு கொள்ளாமல் இருந்த விஷால், ஒருநாள் அவரை அழைத்து ஏன் என்னை தினமும் ப்பாலோ பண்றே? என்று கேட்டவர், அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கோபத்தில் கீழே போட்டு உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தியவர், அதே வேகத்தில் அந்த ரசிகரின் கன்னத்திலும் பளார் பளார் விட்டாராம்.
இநத செய்தி அந்த வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவ, அடிபட்ட ரசிகரின் நண்பர்கள் ஒன்றுதிரண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் விஷால் மீது புகார் செய்து விட்டார்களாம். அதையடுத்து விஷாலை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனபோதும் பெருசாக ரியாக்சன் இல்லையாம். ஆனால் அந்த ஏரியாவில் விஷாலுக்கு எதிராக ஒரு ரசிகர் வட்டம் உருவாகி விட்டதாம்.