Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவை இயக்கும் 'மனம்' விக்ரம் குமார்...!

25 ஜூலை, 2014 - 04:01 IST
எழுத்தின் அளவு:

மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் 'இஷ்க்' என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மனம்' படத்தையும் இயக்கியவர். அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா தற்போது 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் குமார் இயக்கும் படம் ஆரம்பமாக உள்ளது.


இதன் காரணமாகத்தான் விக்ரம் குமார் 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பொதுவாக தாங்கள் அடுத்து நடிக்கும் படங்களின் இயக்குனர்களையோ, தயாரிப்பாளர்களையோ அவரவர் விழாக்களுக்கு நடிகர்கள் வரவழைப்பது வழக்கம். அப்படித்தான் 'அஞ்சான்' விழாவிலும் விக்ரம் குமார் கலந்து கொண்டுள்ளார்.


விக்ரம் குமார் இயக்கும் படம் 'மனம்' படத்தைப் போன்று குடும்பப் படமாக இருக்குமா, அல்லது 'யாவரும் நலம்' படத்தைப் போன்று திகில் படமாக இருக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி. அப்படி 'மனம்' படம் போன்று இருக்கும் பட்சத்தில் அந்தப் படத்தில் சூர்யாவுடன், ஜோதிகா, சிவகுமார், கார்த்தி ஆகியோரில் யாராவது நடிக்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், ஜோதிகாவுக்கும் பொருத்தமான கதை கிடைத்தால் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்று சூர்யா கூறியிருந்தார். அது அநேகமாக விக்ரம் குமார் இயக்கும் படம் மூலம் நடந்தாலும் நடக்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)