உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு மறு திரையீடு செய்யப்பட்டதைப்போன்று, காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக இருக்கும் மலையாள படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடித்த ஒரு வடக்கன் வீர கதா என்ற படம் டிஜிட்டல் படுத்தப்படுகிறது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய வரலாற்று கதையை ஹரிஹரன் இயக்கி இருந்தார். பாலன் கே.நாயர், சுரேஷ் கோபி, மாதவி, கீதா, கேப்டன் ராஜ். சுகுமாரி நடித்த படம்.
16ம் நூற்றாண்டில் தெற்கு கேரளாவை ஆண்ட ஒரு மன்னின் கதை. பல்வேறு விருதுகளை குவித்த இந்தப் படம் மலையாளத்தில் டாப் 10 படங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து செம்மீன், மதிலுகள், தச்சோளி அம்பு படங்களும் டிஜிட்டலுக்கு மாற இருக்கிறது.