உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
பிரிந்து வாழும் நட்சத்திரத் தம்பதிகளான கமல்ஹாசன், சரிகாவின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இந்தியத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். இவரின் தங்கையான அக்ஷராவும் தற்போது 'ஷமிதாப்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தனக்கு ஆரம்ப காலங்களில் நடிப்பதற்கு விருப்பமே இருந்ததில்லை என்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞராக வரவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம். திடீரென தான் நடிக்கும் முடிவை எடுத்தாகச் சொல்கிறார்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிக்கணும்கற ஆசையெல்லாம் இல்லை. இசை மேலதான் எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சி. சின்ன வயசுல இருந்தே பாடிக்கிட்டேயிருப்பேன். இளையராஜா ஸார்கிட்ட பாடறதுக்கு வாய்ப்பு கிடைச்சி அவர் இசையில பாடினேன். ஒரு வீட்டுல அப்பா , அம்மா டாக்டரா இருந்தால் அவங்க குழந்தையும் கையில ஊசி எடுத்துக்கிட்டு தானும் டாக்டராகணும்னு சோதனை பண்ணிப் பார்க்கக் கூடாது. அதனாலதான், நானும் நடிகையாகணும்னு ஆசைப்படலை. இசைக் கலைஞராதான் வரணும்னு ஆசைப்பட்டுட்டு இருந்த சமயத்துல திடீர்னு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. எந்த சமயத்துலயும் அப்பா அம்மா பேரைக் கெடுக்கக் கூடாதுங்கற நம்பிக்கையிலதான் மேக்கப்பே போட ஆரம்பிச்சேன்,” என நடிகையான அனுபவத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். தற்போது தமிழில் விஷால் ஜோடியாக 'பூஜை' படத்திலும், ஒரு சில இந்திப் படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார்.