பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

1992ம் ஆண்டு வௌவிந்த 'ரோஜா' படத்தில் இயக்குனர் மணிரத்னம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஏஆர் ரஹ்மான். அதன்பின் இருவரது கூட்டணியும் எந்த ஒரு பிரிவும் இல்லாமல் கடந்த 34 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை, சாய் அபயங்கர் இசையமைக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை பொய்யான தகவல் என மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடிக்கப் போவதாக சொல்லப்படும் அப்படத்தில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது கூட்டணியைத் தொடர்கிறார்கள். இப்படத்திற்காக இரண்டு பாடல்களையும் ரஹ்மான் ஏற்கெனவே முடித்துவிட்டாராம். இசை உரிமை கூட 15 கோடிக்கும் மேல் விற்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியிருக்கையில் அக்கூட்டணி பிரியப் போவதாக யாரோ பொய்யான செய்தியை பரப்பிவிட்டிருக்கிறார்கள்.




