ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
பார்லியில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா எழுப்பிய கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்துள்ளார். அதன்படி, தியேட்டர் வெளியீட்டிற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் படங்களுக்கு, 18 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறும்படங்களுக்கான தணிக்கை சான்று வழங்கும் கால அவகாசம் 3 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டில் 2031 படங்களுக்கும், 2022-23ல் 2,777 படங்களுக்கும், 2023-24ல் 2,837 படங்களுக்கும், 2024-25ல் 2,687 படங்களுக்கும், 2025 முதல் தற்போது வரையில் 2,248 படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2025-26ல் மட்டும் 55 படங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதேபோல, ஜனநாயகன் உள்பட 10 படங்கள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் முறையிட்டுள்ளன.
தவெக தலைவர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பூதாகரமான நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், விரைவில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும் என்று விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.