ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

பிரஜன், புகழ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி'. இதை யோகேஸ்வரன் மைனர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அவர் பேசுகையில், ‛‛என் நண்பர்கள் பிரஜன், புகழ் நடிக்கிறார்கள். டிரைன் படத்தில் இந்த பட ஹீரோயின் ஜனனி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை. அனைவரும் என் நண்பர்கள். படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்றார்.
பிரஜனும், விஜய்சேதுபதியும் பல ஆண்டு நண்பர்கள். நடந்து முடிந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர்களின் நட்பு வெளிப்பட்டது. அதனால் அவர் படவிழாவுக்கு வந்ததாக தகவல். இந்த விழாவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விக்ரம், சான்ட்ரா, ரம்யா, மதுமிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார் .