பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

ஹிந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் படங்கள் அதிகமாக வந்து கொண்டிருந்த 80 காலகட்டத்தில் 1960 களில் வெளியான 'படிக்காத மேதை' என்ற படம் 'பேர் சொல்லும் பிள்ளை' என்ற பெயரில் ரீமேக் ஆனது.
20 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் ஆனதால் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப காட்சிகளை மாற்றி திரைக்கதையை மாற்றி அடிப்படை கதையை மட்டும் மாற்றாமல் உருவான படம் 'பேர் சொல்லும் பிள்ளை'. படிக்காத மேதை படத்திற்கு வசனம் எழுதிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்திற்கும் வசனம் எழுதியது குறிப்பிடத்தக்க அம்சம்.
பின்னர் அது தெலுங்கில் ராமு (1987)என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் 'கிருஷ்ணுடு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது .
படிக்காத மேதை படத்தில் சிவாஜி நடித்த கேரக்டரில் கமலஹாசன் நடித்தார். கண்ணாம்பா நடித்த கேரக்டரில் கே ஆர் விஜயா நடித்தார். ஈ வி சரோஜா நடித்த கேரக்டரில் ராதிகா நடித்தார், சிஐடி சகுந்தலா நடித்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ஒரு பெரிய பணக்கார குடும்பத்திற்கு வேலைக்காரராக செல்லும் ஒரு அனாதை இளைஞர் அந்த குடும்பத்து வாரிசுகள் சொத்துக்காகவும் ஈகோ வாலும் மோதிக் கொண்டிருக்கும்போது அவற்றை சமாளித்து குடும்பத்தை காப்பாற்றுவது படத்தின் கதை.
இரண்டு காலகட்டங்களில் வழியாக படிக்காத மேதை, பேர் சொல்லும் பிள்ளையும் பெரிய வெற்றி பெற்றது. 'படிக்காத மேதை' படத்தை பீம்சிங் இயக்கினார், 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கினார்.




