நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ராம் கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'சிவா'. தெலுங்குத் திரையுலகத்தின் 'டிரென்ட் செட்டர்' ஆக அமைந்த இந்தப் படம் நாளை மறுதினம் டிஜிட்டல் தரத்தில் ரிரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாகார்ஜுனா பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராம் கோபால் வர்மா, “1972ல் வெளியான ‛தி வே ஆப் டிராகன்'(ரிட்டர்ன் ஆப் தி டிராகன்) படத்தில், ப்ரூஸ் லீ ரோம் நகருக்குப் போகிறார். அங்கு ரெஸ்டாரன்ட்டில் தொந்தரவு செய்யும் ரவுடிகளுடன் சண்டையிடுகிறார். நான் ரெஸ்டாரன்ட் என்பதை கல்லூரி என்று மாற்றினேன், அதோடு என் சொந்த அனுபவங்களை சேர்த்தேன். இது, நான் எழுதியதில் வேகமான ஒரு வரிக் கதையாக இருக்கலாம்” என்று ராம் கோபல் வர்மா கூறினார்.
ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு காட்சியிலிருந்து அல்லது கதாபாத்திரத்திலிருந்து 'இன்ஸ்பயர்' ஆகித்தான் பல படங்களின் ஒரு வரிக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதை திரைக்கதையாக எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் படத்தின் வெற்றி அமைகிறது. அந்த விதத்தில் 'சிவா' படத்தின் வெற்றி அமைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுகிறது.