‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' |

நடிகர் ரவி மோகன் வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் அவரின் பங்களாவிற்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர் தனியார் வங்கி அதிகாரிகள்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரவி மோகன். சமீபகாலமாக இவரது வாழ்வில் புயல் வீச துவங்கி உள்ளது. மனைவி ஆர்த்தியை பிரிந்தார், விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடி உள்ளார். மற்றொருபுறம் ஒரு பட நிறுவனத்திற்கு இரு படங்கள் நடித்து தருவதாக சொல்லி ரூ.6 கோடி முன் பணம் பெற்றார். ஆனால் சொன்னபடி படம் நடிக்கவில்லை என கூறி அந்த நிறுவனம் கோர்ட்டில் இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து ரவி மோகனும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சொன்ன தேதியில் அந்த நிறுவனம் தான் படத்தை துவங்கவில்லை என கோரி நஷ்டஈடு கேட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரவி மோகனுக்கு சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து அதன் மூலம் தாங்கள் வழங்கிய முன்பணத்தைத் திரும்பப் பெற தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த பங்களா கடனில் உள்ளதாம். கடந்த 10 மாதமாக இந்த பங்களாவிற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை ரவி மோகன் செலுத்தவில்லையாம். இதுதொடர்பாக அவரை வங்கி அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் தற்போது அந்த வங்கி, தனது அதிகாரிகளை அனுப்பி கடனை செலுத்தாத அந்த வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். இந்த விவகாரம் ரவி மோகனுக்கு மேலும் நெருக்கடியை தந்துள்ளது.