தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் இப்போது ஒரு புது டிரெண்ட் உருவாகியுள்ளது. புதிய படங்களில் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பயன்படுத்துவதுதான் அந்த டிரென்ட். பொருத்தமான இடங்களில் வரும் அந்தப் பாடல்கள் படத்துக்கே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. பலரும் இளையராஜாவிடம் முறையான அனுமதி பெற்று அப்பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அனுமதி பெறாமல் பயன்படுத்தி பின்னர் நீதிமன்ற வழக்கு, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன் நடித்து நேற்று வெளியான 'தண்டகாரண்யம்' படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த இரண்டு பழைய பாடல்களைப் படத்தில் பயன்டுத்தியுள்ளார்கள்.
கலையரசன், வின்சு சாம் இடையிலான காதல் காட்சியில் 1989ல் வெளிவந்த 'இதயத்தை திருடாதே' படத்தில் இடம் பெற்ற 'ஓ ப்ரியா ப்ரியா' பாடலையும், பின்னர் ஒரு முக்கியமான காட்சியில், 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' படத்தில் இடம் பெற்ற 'மனிதா மனிதா' பாடலையும் பயன்படுத்தி உள்ளார்கள்.
தினேஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடல் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல்தான் அப்படத்திற்கே ஒரு அடையாளத்தைத் தந்து பெரும் வெற்றியைப் பெற வைத்தது.