அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் | தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை | 'ஜெயிலர் 2' படத்தில் வித்யாபாலன்? | சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் நடிக்கும் கார்த்தி? |

1953ம் ஆண்டு வெளியான படம் 'சண்டிராணி'. பி. பானுமதி இயக்கிய இந்தப் படம் வரலாற்று புனைவு கதையை அடிப்படையாகக் கொண்டது. பரணி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பி. எஸ். ராமகிருஷ்ணா ராவ் தயாரித்தது.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் பானுமதி, என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கா ராவ் மற்றும் ரேலங்கி ஆகியோரும், ஹிந்தி பதிப்பில் ஆகாவும் நடித்தனர். சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இசையமைத்தனர். மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படமும் முதல் பெண் இயக்குனரின் திரைப்படம் இதுவே.
ஒரு நாட்டின் மகாராஜாவை சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறான், தளபதி. பின்னர் அவனே மன்னர் ஆகிறான். பின்னர் மன்னரின் இரட்டை மகள்களை கொல்ல முயலும் போது மன்னர் மீது விசுவாசம் கொண்ட அமைச்சர் ஒரு மகளை காட்டுக்கு அனுப்பி விடுகிறார், ஒரு மகளை தானே வளர்க்கிறார். இந்நாளில் காட்டுக்குச் சென்ற மகள் எப்படி நாட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.