தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1953ம் ஆண்டு வெளியான படம் 'சண்டிராணி'. பி. பானுமதி இயக்கிய இந்தப் படம் வரலாற்று புனைவு கதையை அடிப்படையாகக் கொண்டது. பரணி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பி. எஸ். ராமகிருஷ்ணா ராவ் தயாரித்தது.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் பானுமதி, என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கா ராவ் மற்றும் ரேலங்கி ஆகியோரும், ஹிந்தி பதிப்பில் ஆகாவும் நடித்தனர். சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இசையமைத்தனர். மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படமும் முதல் பெண் இயக்குனரின் திரைப்படம் இதுவே.
ஒரு நாட்டின் மகாராஜாவை சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறான், தளபதி. பின்னர் அவனே மன்னர் ஆகிறான். பின்னர் மன்னரின் இரட்டை மகள்களை கொல்ல முயலும் போது மன்னர் மீது விசுவாசம் கொண்ட அமைச்சர் ஒரு மகளை காட்டுக்கு அனுப்பி விடுகிறார், ஒரு மகளை தானே வளர்க்கிறார். இந்நாளில் காட்டுக்குச் சென்ற மகள் எப்படி நாட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.