கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு |
பிரபுவின் ஆரம்பகாலத்தில் சிவாஜியுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். இவர்களின் காம்பினேஷனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தயாரிப்பாளர்களும் அதனை விரும்பினர். சிவாஜி, பிரபு இருவரும் அப்பா மகனாக நிறைய படங்களில் நடித்துள்ளனர், போலீசாக இருவரும் நிறைய படங்களில் நடித்துள்ளனர்.
ஒரே படத்தில் அப்பா, மகனாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் நடித்த படம் 'நீதியின் நிழல்'. எம்.என்.நம்பியார் கொடூர வில்லன், ஏழைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அந்த மணப்பெண்ணை வெளிநாட்டுக்கு விற்பனை செய்கிறவர். அவரது அடியாட்களாக சத்யராஜ், ஜெயசந்திரன் இருப்பார்கள். அவர்களை எதிர்த்து போலீஸ் அதிகாரியான சிவாஜி போராடுவார், ஆனால் அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் உட்காரவைக்கப்பட்டு விடுவார்.
வெளியூரில் படிக்கும் மகன் பிரபு வந்து அவரும் போலீசாகி நம்பியார் கூட்டத்தை அழிப்பதுதான் கதை. பிரபு ஜோடியாக ராதா நடித்திருந்தார். பாரதி- வாசு இயக்கி இருந்தனர். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது.