நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபுவின் ஆரம்பகாலத்தில் சிவாஜியுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். இவர்களின் காம்பினேஷனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தயாரிப்பாளர்களும் அதனை விரும்பினர். சிவாஜி, பிரபு இருவரும் அப்பா மகனாக நிறைய படங்களில் நடித்துள்ளனர், போலீசாக இருவரும் நிறைய படங்களில் நடித்துள்ளனர்.
ஒரே படத்தில் அப்பா, மகனாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் நடித்த படம் 'நீதியின் நிழல்'. எம்.என்.நம்பியார் கொடூர வில்லன், ஏழைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அந்த மணப்பெண்ணை வெளிநாட்டுக்கு விற்பனை செய்கிறவர். அவரது அடியாட்களாக சத்யராஜ், ஜெயசந்திரன் இருப்பார்கள். அவர்களை எதிர்த்து போலீஸ் அதிகாரியான சிவாஜி போராடுவார், ஆனால் அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் உட்காரவைக்கப்பட்டு விடுவார்.
வெளியூரில் படிக்கும் மகன் பிரபு வந்து அவரும் போலீசாகி நம்பியார் கூட்டத்தை அழிப்பதுதான் கதை. பிரபு ஜோடியாக ராதா நடித்திருந்தார். பாரதி- வாசு இயக்கி இருந்தனர். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது.