‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் |
பிரபுவின் ஆரம்பகாலத்தில் சிவாஜியுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். இவர்களின் காம்பினேஷனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தயாரிப்பாளர்களும் அதனை விரும்பினர். சிவாஜி, பிரபு இருவரும் அப்பா மகனாக நிறைய படங்களில் நடித்துள்ளனர், போலீசாக இருவரும் நிறைய படங்களில் நடித்துள்ளனர்.
ஒரே படத்தில் அப்பா, மகனாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் நடித்த படம் 'நீதியின் நிழல்'. எம்.என்.நம்பியார் கொடூர வில்லன், ஏழைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அந்த மணப்பெண்ணை வெளிநாட்டுக்கு விற்பனை செய்கிறவர். அவரது அடியாட்களாக சத்யராஜ், ஜெயசந்திரன் இருப்பார்கள். அவர்களை எதிர்த்து போலீஸ் அதிகாரியான சிவாஜி போராடுவார், ஆனால் அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் உட்காரவைக்கப்பட்டு விடுவார்.
வெளியூரில் படிக்கும் மகன் பிரபு வந்து அவரும் போலீசாகி நம்பியார் கூட்டத்தை அழிப்பதுதான் கதை. பிரபு ஜோடியாக ராதா நடித்திருந்தார். பாரதி- வாசு இயக்கி இருந்தனர். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது.