கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிரபலமான நடிகை தமன்னா. ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். சமீப காலங்களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இருந்தாலும் ஹிந்தியில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் தென்னிந்தியப் படம் ஒன்றில் நடிக்கும் போது நடிகர் ஒருவருடன் தொந்தரவான நிகழ்வு ஒன்று நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார். அந்த நடிகரின் நடத்தை தனக்கு சங்கடமாக இருந்ததாகவும், அதன்பின் இப்படி நடந்தால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்று தெரிவித்ததாகவும், அதன்பின் அந்த நடிகர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
பொதுவாக, தென்னிந்திய நடிகர் என்று குறிப்பிடும் போது அவர் தெலுங்கு நடிகரா, தமிழ் நடிகரா என குழப்பம் வரும். இருந்தாலும் பாலிவுட் நடிகைகள் தெலுங்கு அல்லது தமிழ் பற்றி குறிப்பிடும் போது தென்னிந்திய படம் என்றே சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
தமன்னா கடந்த சில வருடங்களாக விஜய் வர்மா என்ற நடிகரைக் காதலித்து வந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.