ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடிய நிலையில், தற்போது இன்னொரு பாடலுக்கு அவருடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நடனமாடுகிறார். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை, இந்த சிறப்பு பாடல் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இப்படத்தை தயாரித்து வரும் யுவி கிரியேஷன்ஸ் அறிவிக்க உள்ளது.