வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், அவரது ரீமேக் படங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
"ரீமேக் படங்களில் நடிப்பதற்காக மக்கள் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? நம்மிடம் பல சிறந்த இயக்குநர்கள் கிடைப்பது இல்லை. எல்லோரும் என்னை விரைவாக பணம் கொண்டு வரக்கூடியவர் என்று பார்த்தார்கள். நான் ரீமேக் படங்களைச் செய்யாவிட்டால், கட்சியை நடத்துவதற்கு நிதி எங்கிருந்து வரும்?, என் குடும்பத்தை யார் ஆதரிப்பார்கள், ரீமேக் படங்கள் எனக்கு கட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கு எளிதான பாதையாக மாறியது.
நான் செய்த ஒரு தவறு, தோல்வியை அளித்தது. அந்தத் தோல்விக்குப் பிறகு, நான் தொழிலில் என் பிடியை இழந்தேன். ஆனால், பின்னர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் என் வாழ்க்கையில் மீண்டும் வந்து, 'ஜல்சா' படம் மூலம் ஒரு வெற்றியைத் தந்து, என்னை மீண்டும் உயர்த்தினார்.
பயம் அல்லது திறமையின்மையால் அசல் கதைகளைத் தவிர்க்கவில்லை, மாறாக நடைமுறைத் தேவைகளால், எனது அரசியல் பயணத்திற்கு நிதி திரட்டுவதற்காகவே ரீமேக் படங்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று பேசினார்.




