சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன், ‛ரப் நோட்' நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஆரி, பரத், சுனில், பால் டப்பா, அம்மு அபிராமி ஆகியோர் இணைந்ததை அறிவித்தனர்.
இப்போது மலையாளத்தை சேர்ந்த ராப் பாடகர் வேடன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மலையாளத்தில் இவர் சமூக பிரச்னைகளைக் கலந்து பாடி மலையாள ரசிகர்களிடம் பிரபலமானவர். மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ், நரிவேட்டா, கொண்டல் போன்ற படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.