'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

பிற்காலத்தில் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் துப்பறியும் நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இதுபோல அந்த காலத்தில் துப்பறியும் கிரைம் திரில்லர் நாடகங்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கர், கே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கே.ஆர்.ரங்கராஜூவின் 'மோகன சுந்தரம்' நாவல் அதே பெயரில் திரைப்படமானது. அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் தானே தயாரித்து நடித்தார். அவருடன் எஸ்.வரலட்சுமி, பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், ஜே.பி.சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே.கார்த்திகேயன், கொட்டாபுலி ஜெயராமன், வி.சுசீலா, கே.எஸ். அங்கமுத்து, ஜி.சகுந்தலா, சி.வி.வி.பந்துலு, ஜெயக்கொடி கே.நடராஜன், எஸ்.கே.வேணுபாய், எஸ்.ஆர்.லட்சுமி, வி.திருவேங்கடம், கே.எஸ்.ஹரிஹரன் உள்பட பலர் நடித்தனர். ஏடி கிருஷ்ணசாமி இயக்கினார்.
எம்.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட அன்றைய நட்சத்திரங்கள் நடித்தனர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் திகில் மற்றும் துப்பறியும் கதையாக ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுமக்களை கவரவில்லை. இதனால் சுமாரான வரவேற்பையே பெற்றது.




