பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிற்காலத்தில் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் துப்பறியும் நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இதுபோல அந்த காலத்தில் துப்பறியும் கிரைம் திரில்லர் நாடகங்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கர், கே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கே.ஆர்.ரங்கராஜூவின் 'மோகன சுந்தரம்' நாவல் அதே பெயரில் திரைப்படமானது. அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் தானே தயாரித்து நடித்தார். அவருடன் எஸ்.வரலட்சுமி, பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், ஜே.பி.சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே.கார்த்திகேயன், கொட்டாபுலி ஜெயராமன், வி.சுசீலா, கே.எஸ். அங்கமுத்து, ஜி.சகுந்தலா, சி.வி.வி.பந்துலு, ஜெயக்கொடி கே.நடராஜன், எஸ்.கே.வேணுபாய், எஸ்.ஆர்.லட்சுமி, வி.திருவேங்கடம், கே.எஸ்.ஹரிஹரன் உள்பட பலர் நடித்தனர். ஏடி கிருஷ்ணசாமி இயக்கினார்.
எம்.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட அன்றைய நட்சத்திரங்கள் நடித்தனர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் திகில் மற்றும் துப்பறியும் கதையாக ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுமக்களை கவரவில்லை. இதனால் சுமாரான வரவேற்பையே பெற்றது.