ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அபார்ஷக்தி குரானா. 'ஸ்திரீ, லூகா சூப்பி, ஹெல்மெட்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரூட்: ரன்னிங் அவுட் ஆப் டைம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கவுதம் ராம் கார்த்திக் (கவுதம் கார்த்திக்) இணைந்து நடிக்கிறார். பவ்யா த்ரிகா, கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகும் இதனை வெருஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. சூரியபிரதாப் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது " இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியும் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகிறது. ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் திரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம். கவுதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாடையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார். அவருக்கும் கவுதமிற்கும் இடையேயான காட்சிகள் முக்கிய இடத்தை பெறும் என்று நம்புகிறேன்" என்றார்.