ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அபார்ஷக்தி குரானா. 'ஸ்திரீ, லூகா சூப்பி, ஹெல்மெட்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரூட்: ரன்னிங் அவுட் ஆப் டைம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கவுதம் ராம் கார்த்திக் (கவுதம் கார்த்திக்) இணைந்து நடிக்கிறார். பவ்யா த்ரிகா, கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகும் இதனை வெருஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. சூரியபிரதாப் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது " இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியும் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகிறது. ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் திரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம். கவுதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாடையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார். அவருக்கும் கவுதமிற்கும் இடையேயான காட்சிகள் முக்கிய இடத்தை பெறும் என்று நம்புகிறேன்" என்றார்.




