சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் வசுந்தரா தாஸ். ஆறு வயது முதல் பாடத்தொடங்கியவர் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். பின்னர் தனி ஆல்பங்களில் பாடியவர் தமிழ் திரைப்படங்களில் பாடுவதற்காக சென்னை வந்தார். ஆனால் அவர் பாடுவதற்கான வாய்ப்பை விட நடிப்பதற்காகவே அதிக வாய்ப்புகள் வந்தது. இதனால் நடிக்கவும் அவர் தயாரானார்.
முதன்முதலில் அவர் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றது 'அலைபாயுதே' படத்திற்காக. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க அவர் தேர்வாகவில்லை. தான் எதிர்பார்க்கும் எளிய தோற்றம் வசுந்தராவிடம் இல்லை என்றும், அவரிடம் ஒரு ரிச் லுக் இருப்பதாகவும் மணிரத்னம் கூறிவிட்டார். அதன் பிறகு அவர் 'ஹேராம்' படத்தில் நடிப்பதற்கு தேர்வானார். காரணம் வடநாட்டு பெண் என்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் சரியாக இருப்பதாக கமல் கருதி வாய்ப்பளித்தார்.
என்றாலும் ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி' பாடல் பாடும் வாய்ப்பு அளித்தார். அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் நடித்த அவர் மற்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகையாக அவர் ஜெயிக்கவில்லை. ஆனால் பாடகியாக நிலை நிறுத்திக் கொண்டார்.