சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் |

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் வசுந்தரா தாஸ். ஆறு வயது முதல் பாடத்தொடங்கியவர் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். பின்னர் தனி ஆல்பங்களில் பாடியவர் தமிழ் திரைப்படங்களில் பாடுவதற்காக சென்னை வந்தார். ஆனால் அவர் பாடுவதற்கான வாய்ப்பை விட நடிப்பதற்காகவே அதிக வாய்ப்புகள் வந்தது. இதனால் நடிக்கவும் அவர் தயாரானார்.
முதன்முதலில் அவர் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றது 'அலைபாயுதே' படத்திற்காக. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க அவர் தேர்வாகவில்லை. தான் எதிர்பார்க்கும் எளிய தோற்றம் வசுந்தராவிடம் இல்லை என்றும், அவரிடம் ஒரு ரிச் லுக் இருப்பதாகவும் மணிரத்னம் கூறிவிட்டார். அதன் பிறகு அவர் 'ஹேராம்' படத்தில் நடிப்பதற்கு தேர்வானார். காரணம் வடநாட்டு பெண் என்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் சரியாக இருப்பதாக கமல் கருதி வாய்ப்பளித்தார்.
என்றாலும் ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி' பாடல் பாடும் வாய்ப்பு அளித்தார். அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் நடித்த அவர் மற்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகையாக அவர் ஜெயிக்கவில்லை. ஆனால் பாடகியாக நிலை நிறுத்திக் கொண்டார்.