புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் வசுந்தரா தாஸ். ஆறு வயது முதல் பாடத்தொடங்கியவர் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். பின்னர் தனி ஆல்பங்களில் பாடியவர் தமிழ் திரைப்படங்களில் பாடுவதற்காக சென்னை வந்தார். ஆனால் அவர் பாடுவதற்கான வாய்ப்பை விட நடிப்பதற்காகவே அதிக வாய்ப்புகள் வந்தது. இதனால் நடிக்கவும் அவர் தயாரானார்.
முதன்முதலில் அவர் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றது 'அலைபாயுதே' படத்திற்காக. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க அவர் தேர்வாகவில்லை. தான் எதிர்பார்க்கும் எளிய தோற்றம் வசுந்தராவிடம் இல்லை என்றும், அவரிடம் ஒரு ரிச் லுக் இருப்பதாகவும் மணிரத்னம் கூறிவிட்டார். அதன் பிறகு அவர் 'ஹேராம்' படத்தில் நடிப்பதற்கு தேர்வானார். காரணம் வடநாட்டு பெண் என்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் சரியாக இருப்பதாக கமல் கருதி வாய்ப்பளித்தார்.
என்றாலும் ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி' பாடல் பாடும் வாய்ப்பு அளித்தார். அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் நடித்த அவர் மற்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகையாக அவர் ஜெயிக்கவில்லை. ஆனால் பாடகியாக நிலை நிறுத்திக் கொண்டார்.