Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெனாலிராமன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது! மதுரைக்கு கிளம்பினார் வடிவேலு!!

23 ஜூன், 2013 - 10:23 IST
எழுத்தின் அளவு:

இரண்டு வருடங்களுக்குப்பிறகு வடிவேலு நடித்து வந்த படம் கஜபுஜகஜ தெனாலிராமன். இரட்டை வேடங்களில் வடிவேலு நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போட்டு நடைபெற்று வந்தது. ஆனால், என்ன காரணமோ, ஆரம்பத்தில் இருந்தே இப்படத்துக்கு கேமராமேன் செட்டாகவில்லையாம்.

சகாதேவன், கோபிநாத், விஜய்மில்டன் என மூன்று கேமராமேன்கள் சில நாட்கள் மட்டுமே ஒளிப்பதிவு செய்து விட்டு, அங்கு நடந்த குளறுபடிகளை காரணம் காட்டி, டாடா காட்டி விட்டார்களாம். இதனால் அடுத்து எத்தகையை குளறுபடிகளையும் எதிர்கொள்ளக்கூடிய கேமராமேனை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால், கடுப்பாகி விட்டார் வடிவேலு. இரண்டு வருடம் கழித்து ஒரு படத்தில் நடிக்க வந்தால், இப்போதும் குழப்பமா? அட போங்கப்பா என்று தனது கோபத்தை காட்டியவர், ரிலாக்ஸ் பண்ணுவதற்காக மதுரைக்கு பறந்து விட்டாராம்.

ஆனால், என்னதான் குழப்பம் நடந்தது. எதற்காக மூன்று கேமராமேன்களும் எஸ்கேப்பாகி விட்டனர் என்று தெனாலிராமன் யூனிட்டை விசாரித்தால், மூச் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)