பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இரண்டு வருடங்களுக்குப்பிறகு வடிவேலு நடித்து வந்த படம் கஜபுஜகஜ தெனாலிராமன். இரட்டை வேடங்களில் வடிவேலு நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போட்டு நடைபெற்று வந்தது. ஆனால், என்ன காரணமோ, ஆரம்பத்தில் இருந்தே இப்படத்துக்கு கேமராமேன் செட்டாகவில்லையாம்.
சகாதேவன், கோபிநாத், விஜய்மில்டன் என மூன்று கேமராமேன்கள் சில நாட்கள் மட்டுமே ஒளிப்பதிவு செய்து விட்டு, அங்கு நடந்த குளறுபடிகளை காரணம் காட்டி, டாடா காட்டி விட்டார்களாம். இதனால் அடுத்து எத்தகையை குளறுபடிகளையும் எதிர்கொள்ளக்கூடிய கேமராமேனை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால், கடுப்பாகி விட்டார் வடிவேலு. இரண்டு வருடம் கழித்து ஒரு படத்தில் நடிக்க வந்தால், இப்போதும் குழப்பமா? அட போங்கப்பா என்று தனது கோபத்தை காட்டியவர், ரிலாக்ஸ் பண்ணுவதற்காக மதுரைக்கு பறந்து விட்டாராம்.
ஆனால், என்னதான் குழப்பம் நடந்தது. எதற்காக மூன்று கேமராமேன்களும் எஸ்கேப்பாகி விட்டனர் என்று தெனாலிராமன் யூனிட்டை விசாரித்தால், மூச் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.