மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மலையாள திரையுலகில் வெளியாகி முதன் முதலில் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படம் ‛திரிஷ்யம்'. ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமைந்த வருண் பிரபாகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஷன் பஷீர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்ததை தொடர்ந்து அங்கே கொலம்பஸ், மல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புதிய படம் ஒன்று முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரோஷன் பஷீர். அது மட்டுமல்ல மலையாளத்தில் ஹனிரோஸ் நடிப்பில் உருவாகி வரும் ‛ரேச்சல்' மற்றும் தமிழில் உருவாகும் ‛ஆல் பாஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், தன்னுடைய கதாபாத்திரம் காரணமாக திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார்.