'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாள திரையுலகில் வெளியாகி முதன் முதலில் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படம் ‛திரிஷ்யம்'. ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமைந்த வருண் பிரபாகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஷன் பஷீர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்ததை தொடர்ந்து அங்கே கொலம்பஸ், மல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புதிய படம் ஒன்று முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரோஷன் பஷீர். அது மட்டுமல்ல மலையாளத்தில் ஹனிரோஸ் நடிப்பில் உருவாகி வரும் ‛ரேச்சல்' மற்றும் தமிழில் உருவாகும் ‛ஆல் பாஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், தன்னுடைய கதாபாத்திரம் காரணமாக திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார்.