நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா என தமிழ் சினிமாவின் டாப் கலைஞர்கள் இருந்தும் அப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் கூட படம் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட வெளியீட்டிற்கு முன்பாக, இப்படம் மீதான நம்பிக்கையில் படத்தை ஓடிடியில் வெளியிட எட்டு வாரங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் செய்தனர். வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட எட்டு வார ஓடிடி இடைவெளி அவசியம். வழக்கம் போல நான்கு வாரங்களில் வெளியிடும் ஒப்பந்தம் இருந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட முடியாது.
படம் ஒரு வாரமே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டை நான்கு வாரங்களில் வெளியிடவும், முன்னர் செய்த ஒப்பந்தப்படியான விலையைக் குறைக்கவும் ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 25 சதவீதம் வரை விலையைக் குறைக்கும்படியான பேச்சு நடந்து வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.