என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா என தமிழ் சினிமாவின் டாப் கலைஞர்கள் இருந்தும் அப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் கூட படம் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட வெளியீட்டிற்கு முன்பாக, இப்படம் மீதான நம்பிக்கையில் படத்தை ஓடிடியில் வெளியிட எட்டு வாரங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் செய்தனர். வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட எட்டு வார ஓடிடி இடைவெளி அவசியம். வழக்கம் போல நான்கு வாரங்களில் வெளியிடும் ஒப்பந்தம் இருந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட முடியாது.
படம் ஒரு வாரமே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டை நான்கு வாரங்களில் வெளியிடவும், முன்னர் செய்த ஒப்பந்தப்படியான விலையைக் குறைக்கவும் ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 25 சதவீதம் வரை விலையைக் குறைக்கும்படியான பேச்சு நடந்து வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.