ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் |

நாட்டுப்புற பாடகியான கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்(99) வயது மூப்பு காரணமாக காலமானார்.
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் முத்தன் - கருப்பியம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் கருப்பாயி. கொல்லங்குடியில் கிராமிய பாடல்களை பாடி அந்த ஊர்களில் பிரபலமாக இருந்தார். தனது ஊர் பெயரே அவரது பெயருடன் சேர்ந்து அடையாளமாக மாறியது. பின்னர் வானொலியில் தன் பணியைத் தொடங்கினார்.

அங்கு பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இவரது திறமையை அறிந்து நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் தான் இயக்கி, நடித்த ‛ஆண்பாவம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ச்சியாக பாண்டியராஜன் நடித்த படங்களான ‛ஏட்டிக்கு போட்டி, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆண்களை நம்பாதே' போன்ற படங்களிலும் நடிக்க வைத்தார். கடைசியாக சசிகுமார் நடித்த காரி படத்தில் நடித்தார். வயது மூப்பால் கலையுலகை விட்டு விலகினார்.
மறைந்த முன்னார் முதல்வர் ஜெயலலிதா, இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார். இவரிடம் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.

வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கருப்பாயி இன்று(ஜுன் 14) காலை 8 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லம் அருகே நடைபெறுகிறது.




