உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி' என பல சீரியலில் நடித்த கண்மணி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை கண்மணி, தற்போது கடந்த ஜூன் 8-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, நாங்கள் இருவரும் ஒரு காதல் கதை எழுதினோம். வாழ்க்கை அதன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்துடன் எங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எங்கள் பயணம் ஒரு திருப்பத்துடன் தொடர்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கண்மணி.