பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமாருக்கு துஷ்யன், இரட்டையர்களாக தர்ஷன், ரிஷயன் என 3 மகன்கள். இதில் துஷ்யந்த் பல படங்களில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஆனார். தர்ஷன் சினிமா ஆர்வத்தி்ல் இருக்கிறார். புனே திரைப்பட கல்லுாரி, டில்லி ஸ்கூல் ஆப் டிராமாவில் படித்து இருக்கிறார். ரிஷயன் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்.
இந்நிலையில், டில்லியில் படித்த காலத்தில் பூஜா என்ற பெணணை காதலித்து இருக்கிறார் தர்ஷன். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர்கள் நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்தது. இந்நிலையில் தர்ஷன், பூஜா திருமணம் நாளை(ஜுன் 8) காலை சென்னையில் நடக்கிறது. இன்று வட இந்திய முறைப்படி சில சடங்குகள் நடக்கின்றன. அவர்கள் குடும்பத்தினர், நெருங்கிய வட்டாரத்துக்கு மட்டுமே திருமண அழைப்புகள் அனுப்பபட்டுள்ளன. விரைவில் தர்ஷன் ஹீரோ ஆகப்போகிறார். அதற்கான பணிகள் நடக்கின்றன என்று கூறப்படுகிறது.