படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் அடுத்து திருவள்ளுவர் வாழ்க்கையை திருக்குறள் என்ற பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. ஆனாலும், மோகமுள், பாரதி, பெரியார் படங்களை எடுத்த இயக்குனர் ஞானராஜசேகரன் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛தமிழை விட மலையாளத்தில் நல்ல படங்கள் அதிகம் வருகிறது. மலையாள ரசிகர்கள் ரசனை வேறு என்கிறார்கள். நான் கேரளத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவர்களை விட தமிழக ரசிகர்கள் ரசனை சிறந்ததுதான். இல்லாவிட்டால் நான் 6 நல்ல படங்களை எடுத்திருக்க முடியாது. படங்களை ரசிகர்களை கொண்டு போய் சேர்ப்பதில் சில பிரச்னைகள் இருக்கிறது. தியேட்டர் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. மற்றபடி நல்ல படங்கள் தமிழில் அதிகம் வருகிறது, டூரிஸ்ட் பேமிலி கூட அப்படிதான் வந்தது'' என்றார்.
இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‛‛நான் படத்தை முடித்துவிட்டு இளையராஜாவிடம் போனேன். அவர் எதுவும் பேசாமல் இந்த படத்துக்கு சிறந்த இசையை கொடுத்தார். திருவள்ளுவராக கலைசோழனும், வாசுகியாக தனலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸ்'' என்றார்.