என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பழம்பெரும் நடிகைகளில் அதிகம் அறியப்படாதவர் கே.மாலதி. 1926ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஏலூரில் பிறந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த இவர் 'பாதாள பைரவி' படத்தில் என்.டி. ராமராவுக்கு ஜோடியாக நடித்தார். கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் 'காளகஸ்தி மகாத்மியம்' என்ற படத்தில் நடித்தார். 'ராஜகுமாரி' படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஜோடியாக நடித்தார். இப்படி மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிறகும் மாலதி ஏனோ அதிக படங்களில் நடிக்கவில்லை.
பாதாள பைரவி, நீதிபதி, யாருக்கு சொந்தம், ரத்னகுமார் போன்ற பல தமிழ் படங்களிலும் பாக்கியலக்ஷ்மி, ஸ்ரீ கலகஸ்தீஸ்வர மஹாத்யம், அம்மே எவரு, பெல்லி கானுகா, குணசுந்தரி கதா, பக்த போதனா போன்ற பல தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.1946ம் ஆண்டு வெளியான “ஸ்ரீ முருகன்” படத்தில் எம்.ஜி.ஆர் - மாலதி ஆடிய சிவ பார்வதி நாட்டிய நடனம் அன்றைய ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தில் கதாநாயகியும் இவரே. குறுகிய காலத்திலேயே குணச்சித்திர வேடங்களில் நடித்த மாதத்தில் பின்னர் திரைப்படங்களில் இருந்து விலகினார்.