சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கோலிவுட்டில் பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது அடிக்கடி நடக்கும். ஆனால், சிறிது காலத்தில் அவர்களின் பிரிவு செய்தியை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது அது வழக்கமான ஒன்றாகிவிடும். ஒருவர் பற்றி மற்றவர் குறை சொல்வது அரிது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தார்கள், விஷ்ணுவிஷால், அவர் மனைவி ரஜினியை பிரிந்தார், ஜிவி பிரகாஷ் - சைந்தவியை பிரிந்தார். ஆனால், அவர்கள் தங்கள் பார்ட்னர் பற்றி மீடியாவில் பேசியது இல்லை, சண்டை போடவில்லை.
ஆனால், ரவி மோகன், ஆர்த்தி விஷயத்தில் சில வாரங்களாக இரண்டு பேரும் மாறி, மாறி சண்டை போட்டு அறிக்கை விட்டனர். ஒரு கட்டத்தில் கோர்ட் தலையிட அவர்கள் அறிக்கை போரை நிறுத்த வேண்டிய கட்டாயம். அடுத்து இந்த விவகாரத்தில் பேசப்பட்ட பாடகி கெனிஷாவும் சில அறிக்கை விட்டார். நேற்று தங்கள் மீது தவறாக பேசும் பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்த்தி அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும். இவர்களுக்குள் என்னதான் பிரச்னை? சட்டப்படி சில விவகாரங்கள் நடக்க, இவர்கள் மீடியா முன்பு சண்டைபோடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.