பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் தோல்வியில் இருந்து மீள்வதற்காக வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நாடி வருகிறார் ஜீவா. தற்போது யான், என்றென்றும் புன்னகை என இரண்டு படங்களில் நடித்து வந்தாலும், இதே வேகத்தில் மேல்தட்டு இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்.
இப்படி அவர் தீவிரமாக கதை கேட்டு வந்த நேரம்தான், பகலவன் கதையை சீமான் சொன்னார். ஆனால் பிடிக்கவில்லை என்று தவிர்த்து விட்டார் ஜீவா. அதையடுத்து நாடோடிகள், போராளிகள் படத்தை இயக்கிய சமுத்திரகனியை நாடியுள்ளார். தற்போது ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் நிமர்ந்து நில் படத்தை இயக்கும் சமுத்திரகனி, பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், மீடியம் ரேஞ்ச் படத்தையாவது கொடுத்து காப்பாற்றி விடுவார் என்பதால், அவரிடம் தன்னை வைத்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.
அதற்கு, நிமிர்ந்து நில் பட வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் திரைக்கு வந்ததும் நாம் இணைவது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளாராம் சமுத்திரகனி. அவரது வார்த்தையை நம்பி இப்போது வேறு புதிய படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் ஜீவா.