Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா!

19 ஜூன், 2013 - 02:40 IST
எழுத்தின் அளவு:

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் தோல்வியில் இருந்து மீள்வதற்காக வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நாடி வருகிறார் ஜீவா. தற்போது யான், என்றென்றும் புன்னகை என இரண்டு படங்களில் நடித்து வந்தாலும், இதே வேகத்தில் மேல்தட்டு இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்.

இப்படி அவர் தீவிரமாக கதை கேட்டு வந்த நேரம்தான், பகலவன் கதையை சீமான் சொன்னார். ஆனால் பிடிக்கவில்லை என்று தவிர்த்து விட்டார் ஜீவா. அதையடுத்து நாடோடிகள், போராளிகள் படத்தை இயக்கிய சமுத்திரகனியை நாடியுள்ளார். தற்போது ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் நிமர்ந்து நில் படத்தை இயக்கும் சமுத்திரகனி, பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், மீடியம் ரேஞ்ச் படத்தையாவது கொடுத்து காப்பாற்றி விடுவார் என்பதால், அவரிடம் தன்னை வைத்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.

அதற்கு, நிமிர்ந்து நில் பட வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் திரைக்கு வந்ததும் நாம் இணைவது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளாராம் சமுத்திரகனி. அவரது வார்த்தையை நம்பி இப்போது வேறு புதிய படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் ஜீவா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)