மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
2012ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் அரவான். இதில் கதாநாயகி தன்ஷிகா தவிர இன்னொரு கதாநாயகியாக மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகை அர்ச்சனா கவி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஞானக்கிறுக்கன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛நடிகையாக இருந்த தான் கதாசிரியராக உருவெடுத்து ஒரு படத்திற்கான கதையை தயார் செய்து வந்ததாகவும் ஆனால் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தனது கனவுக்கு வேட்டு வைத்து விட்டதாகவும்' கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மோகன்லால் மற்றும் வித்யாபாலன் இருவரும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கி வந்தேன். எனது கனவு படம் என்று தான் அதை நினைத்தேன். அந்தக் கதை மோகன்லாலுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பிற்கு கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில்தான் 96 படம் வெளியானது. கிட்டத்தட்ட நான் உருவாக்கி வைத்திருந்த கதையும், இந்த படமும் ஒரே போல இருந்ததால் அப்படியே அந்த கதையை கிடப்பில் போட்டு விட்டேன். என் கனவு அத்துடன் கலைந்து போனது” என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.