அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
2012ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் அரவான். இதில் கதாநாயகி தன்ஷிகா தவிர இன்னொரு கதாநாயகியாக மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகை அர்ச்சனா கவி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஞானக்கிறுக்கன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛நடிகையாக இருந்த தான் கதாசிரியராக உருவெடுத்து ஒரு படத்திற்கான கதையை தயார் செய்து வந்ததாகவும் ஆனால் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தனது கனவுக்கு வேட்டு வைத்து விட்டதாகவும்' கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மோகன்லால் மற்றும் வித்யாபாலன் இருவரும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கி வந்தேன். எனது கனவு படம் என்று தான் அதை நினைத்தேன். அந்தக் கதை மோகன்லாலுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பிற்கு கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில்தான் 96 படம் வெளியானது. கிட்டத்தட்ட நான் உருவாக்கி வைத்திருந்த கதையும், இந்த படமும் ஒரே போல இருந்ததால் அப்படியே அந்த கதையை கிடப்பில் போட்டு விட்டேன். என் கனவு அத்துடன் கலைந்து போனது” என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.