நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

சசிகுமார், சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3வது வாரத்தை தாண்டியும், 75 கோடி வசூலைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிப்பில் அடுத்து வரும் படம் 'ப்ரீடம்'. வருகிற ஜூலை 10ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்குகிறார். சசிகுமார், லிஜோமோல் ஜோஷ் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎப் மாளவிகா, போஸ் வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது. 'டூரிஸ்ட் பேமிலி' போன்று இலங்கை பின்னணி களத்தில், இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ராஜீவ்வை கொல்ல அனுப்பப்பட்ட மனித வெடிகுண்டு பெண்ணின் கதை என்பதை டீசரிலேயே வெளியிட்டிருந்தார்கள்.
90 காலக்கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த காலக்கட்டத்தைத் திரையில் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90களின் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்ச்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.




