பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஏஆர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தார். 28 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களின் பிரிவு திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் உடன் ரஹ்மான் நேரத்தை செலவிட முடியாதது, சாய்ரா பானுவிற்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு என இவர்கள் பிரிவு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். ரஹ்மானிடம் தொகுப்பாளினி டிடி யாரிடமாவது ஒருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டார். அதற்கு ரஹ்மான், ‛‛எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கணும். குறிப்பாக என் மகள், மகன் உள்ளிட்ட குடுபத்தினரிடமும், முன்னாள் மனைவி சாய்ராவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வேலை வேலை என இருந்துவிட்டதால் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றார். மேலும் என் உசுரே ரசிகர்கள் தான், அவர்கள் இல்லையென்றால் என் வண்டி ஓடாது" என தெரிவித்தார்.