துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஏஆர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தார். 28 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களின் பிரிவு திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் உடன் ரஹ்மான் நேரத்தை செலவிட முடியாதது, சாய்ரா பானுவிற்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு என இவர்கள் பிரிவு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். ரஹ்மானிடம் தொகுப்பாளினி டிடி யாரிடமாவது ஒருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டார். அதற்கு ரஹ்மான், ‛‛எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கணும். குறிப்பாக என் மகள், மகன் உள்ளிட்ட குடுபத்தினரிடமும், முன்னாள் மனைவி சாய்ராவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வேலை வேலை என இருந்துவிட்டதால் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றார். மேலும் என் உசுரே ரசிகர்கள் தான், அவர்கள் இல்லையென்றால் என் வண்டி ஓடாது" என தெரிவித்தார்.