அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையே ஏற்பட்டுள்ள பிரிவு பிரச்னையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண், என்னை வசைபாடுபவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார் பாடகி கெனிஷா.
நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்துவிட்டார். அவரிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார் ரவி மோகன். இதை வைத்து ஆர்த்தி, ரவி மோகன், ஆர்த்தியின் அம்மா, தயாரிப்பாளர் சுஜாதா ஆகியோர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆர்த்தி வெளியிட்ட கடைசி அறிக்கையில், ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என பாடகி கெனிஷாவை மறைமுகமாக சாடியிருந்தார். இதை வைத்து கெனிஷாவை பலரும் வலைதளங்களில் சகட்டுமேனிக்கு திட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
அந்த கருத்துக்கள் சிலவற்றை கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் உடன், ‛‛நடந்த பிரச்னைகளுக்கு நான் தான் காரணம் என ஒருவர் பொய்யாக பேசுவதை நம்பினால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள். அங்கு உண்மை தெரியவரும். எனக்கு எதிராக பொய்யான வெறுப்புகளை மட்டுமே பரப்புகிறார்கள். தயவு செய்து அவற்றை நிறுத்துங்கள். நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.
என்னைப் பற்றி நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், சாபங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள், உடல்ரீதியான அவமானங்கள், கொலை மிரட்டல்கள் போன்றவற்றால் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என யோசித்து பார்த்து இருக்கிறீர்களா. கர்மா பற்றி பேசுகிறார்கள். ஆனால் பலருக்கு என்ன நடக்கிறது என பார்க்க நான் விரும்பவில்லை. நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன். இவை எல்லாவற்றையும் அவரிடம் விட்டுவிடுகிறேன். நான் அவரிடம் சரணடைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.